மாவட்டத்தில் 47 விடுதிகள் உள்ளன மாணவர்கள் பயன்பெறலாம்

59பார்த்தது
தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 24 மாணவர்களுக்கானது மற்றும் 18 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் 3 மாணவர்களுக்கானது மற்றும் 2 மாணவியர்களுக்கானது என மொத்தம் 47 இடம் உள்ளது.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலு மாணவ / மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி