காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக விருதுநகர் மாவட்டம் உட்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, செவல்பட்டி, பாண்டியன்நகர், மந்திரிஓடை, பிச்சம்பட்டி, கழுவனச்சேரி, வக்கணாங்குண்டு, மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. காலையிலேயே மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.