விருதுநகர்: விஷம் குடித்த முதியவர் பலி

67பார்த்தது
வயது முதிர்வு காரணமாக விஷம் குடித்த முதியவர் பலி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா வழுக்கலொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாசையா வயது 64. இவர் கடந்த 20 வருடங்களாக தனது பூர்வீக வீட்டில் மனைவி மற்றும் மகன்களைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக யாருக்கும் இடையூறாக இருக்கக் கூடாது என நினைத்த அவர் விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மகன் அளித்த புகாரின் அடிப்படையில் மல்லாக்கினர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி