அதிமுகவினருக்கு இடையே மோதல் துப்பாக்கி சூடு

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சந்திரன் என்பவரை அதிமுக தலைமை கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரிக்குடி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக நியமித்தது. இதற்கு முன்பாக நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த பூமிநாதனை நீக்கப்பட்டதால் நரிக்குடி ஒன்றியத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி குறித்து நரிக்குடி அதிமுக வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்டனர். நடந்த கார சார விவாதத்தை தொடர்ந்து நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளரும், இயக்குநருமான பிரபாத் வீட்டிற்கு இன்று தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகி பிரபாத்தின் மகன் மிதின் சக்கரவர்த்தியை சந்திரன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியை வைத்து தற்காப்பிற்காக வானத்தை நோக்கி சுடும் போது பலத்த சத்தத்துடன் கேட்டதை தொடர்ந்து சந்திரன் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிய வருகிறது. அக்கம்பக்கத்தினர் அ. முக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் திருச்சுழி டி. எஸ். பி பொன்னரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி