விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 7 மற்றும் வார்டு 9 ஆகிய பகுதிகளில் காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் R. K. செந்தில் அவர்கள் இன்று கள ஆய்வு செய்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் வாருகால், குடிநீர் பற்றாக்குறை சம்பந்தமாக தெரிவித்தனர். உடனடியாக வாருகால், குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.