குற்றசம்பவங்களை தடுக்க சிசிடிவி எஸ். பி துவக்கி வைத்தார்

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொதுமக்கள் நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காரியாபட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 12 இடங்களில் 35 சிசிடிவி கேமராக்களை அமைத்து காரியாபட்டி காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் துவக்கி வைத்து கேமராக்களை ஆய்வு செய்தார்.

உடன் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன், சப் இன்ஸ்பெக்டர் சமிளாபேகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கூறுகையில்,

குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றம் நடவாமல் இருப்பதற்கும் சிசிடிவி கேமரா பெரும் உதவியாக உள்ளது. மேலும் தற்போது மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பொதுமக்களாகிய நீங்கள் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி