வேளாண் இயந்திரங்கள் கருவிகளின் பராமரிப்பு குறித்த முகாம்

54பார்த்தது
வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாம் வரும் 14. 05. 2025 அன்று வேளாண்மைப் பொறியியல் துறை, விபி. எம். எம் கல்லூரி எதிரில், கிருஷ்ணன்கோவில் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

டிராக்டர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு உழவு பணிகளில் ஈடுபடுத்த இயலும். டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதே போன்று, பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர் மற்றும் இதர உழவுக் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.
இம்முகாமில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள் நேரில் கலந்துரையா டிட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய மற்றும் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை முகாம்களில் காட்சிபடுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து அவ்வியந்திர உற்பத்தியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.

டேக்ஸ் :