விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் ஏற்பாட்டில், காரியாபட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வரலொட்டி, பெரிய சோழாண்டி, அழகியநல்லூர், கெப்பிலிங்கம் பட்டி, மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் மற்றும் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து பூத் கமிட்டி பொறுப்பாளர் மைக்கேல் ராயப்பன் விரிவாக எடுத்துரைத்தார்.