விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பள்ளிமடம் கிராமத்தில் கோட்டை கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கோயில் வளாகத்தில் திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பொன்று நுழைந்தது.
இதனையடுத்து கோயில் பகுதியில் இருந்தவர்கள் பாம்பு புகுந்தது குறித்து தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் கோயில் பகுதியில் புகுந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து உயிருடன் மீட்ட நிலையில் அதனை பத்திரமாக கொண்டு சென்று அருகிலுள்ள வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.