ஸ்ரீவில்லிபுத்தூர்: தந்தையை அடித்த கொன்ற மகன்...

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் பால கிருஷ்ணமூர்த்தி (57). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவல்லி (50). இவர்களுக்கு,
அஜித்குமார், திவ்ய பாரதி மகன், மகள் உள்ளனர். அஜித்குமார் ஐடிஐ படித்து விட்டு எந்த வேலைக்கும் சொல்லாமல் இருக்கிறார்.
இதில் மகள் திவ்யபாரதி சுரைக்காய் பட்டியில் உள்ள தனது பாட்டி ராமலக்ஷ்மி வீட்டிலிருந்து சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ படிப்பு படித்து முடித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு புஷ்பவல்லிக்கும்
அஜித்குமாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுரைக்காய்பட்டியில் உள்ள தனது தாய் ராமலட்சுமி வீட்டிற்கு புஷ்பவல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் பாலகிருஷ்ணமூர்த்தி அஜித்குமார் ஆகியோருக்கிடையே ஜூலை 4 நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த அஜித்குமார் தனது தந்தையான பாலகிருஷ்ண மூர்த்தியை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், விசாரணை மேற்கொண்டதோடு, கொலையான பாலகிருஷ்ண மூர்த்தியின் உடலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி