ஸ்ரீவில்லிபுத்துாரில் மிதமான சாரல் மழை. மக்கள் மகிழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துரில் நேற்று மார்ச். 18 இரவு மழை பெய்தது.
காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
மாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக குளிர்ந்த காற்றுடன் பலத்த சாரல் மழை பெய்தன.
இதனால் மாரியம்மன்
கோயில் முன்பு சகதி ஏற் பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். இதே போல் பஸ் ஸ்டாண்ட், நேதாஜி ரோடு, தேரடி மற்றும் பல்வேறு தாழ்வான
பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.