ஸ்ரீவில்லிபுத்தூர்: லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது

69பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், நூர்சாகிபுரத்திலுள்ள பெட்டிக் கடையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் நூர்சாகிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முதியவர் பாலகுரு என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தது. 

மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 350/- கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி