ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4: 30 மணிக்கு மகா கணபதி பூஜை, அனுக்ஞை பூஜை, புண்யாக வாசனமும், வாஸ்து சாந்தி பூஜை, காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் காலை 6: 30 மணிக்கு மாரியம்மன் கோயில் தெருவில் இருந்து நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சுற்றி கொடி பட்டம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்மன் சிறப்பு பூஜைகள் செய்து காலை 8. 10 மணிக்கு கோவிலில் கொடி
ஏற்றப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தினமும் காலை 10: 00 மணிக்கு மேல் அம்மன் மண்டகப்படி எழுந்தருளலும், இரவு 10: 00 மணிக்குமேல் வெவ்வேறு க வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடைப்பெறும். கோயில் வளாக முன்பாக தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 29 மதியம் 12: 35 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், மார்ச் 30 காலை 11: 00 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவல நிர்வாகிகள் செய்திருந்தனர்.