ஸ்ரீவில்லிபுத்தூர் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை. போக்சோ நீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பு. திருச்சுழியைச் சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக முருகன், பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் ஆகிய 4 பேர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி 4 பேரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி சுதாகர் நால்வருக்கும் 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.