ஸ்ரீவி: நீதிமன்றத்தில் கடும் சோதனைக்கு பிறகு அனுமதி...

51பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார்நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே அனுமதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகத்தில் இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே, நீதிமன்றத்திற்குள் வழக்கு தொடர்பானவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் நீதிமன்றம் அருகில் வழக்கு விசாரணை வந்த ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ். ஐ, 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்ற கட்டடத்தின் நுழைவுப் பகுதியில் போலீசார்
நியமிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பானவர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கின்றனர். நீதிமன்றத்தின் முன்பு சந்தேகத்திற்குரியயில் வகை நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அடிக்கடி சோதனை செய்து அப்புறப்படுத்துகின்றனர்.
இதனால் தற்போது நீதிமன்றத்திற்குள் தனி நபர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி