விருதுநகர் மாவட்டம், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, இன்று மே 10 ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான மற்றும் பொது மருத்துவ முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேலரத வீதி ராமராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் இரத்ததான மற்றும் பொது மருத்துவ முகாமினை, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். மேலும் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டுகள் தெரிவித்தார். மேலும் நடைபெற்ற இரத்ததான முகாமில் ஏராளமான அதிமுக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.