விருதுநகர்: போதைப்பொருள் தயாரிக்கப்பட்டதா? காவல்துறையினர் ஆய்வு

56பார்த்தது
சென்னையில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அந்தப் போதைப் பொருள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த வீட்டில் ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அந்த வீடு அமைந்துள்ளது. 

இந்த ஒதுக்குப்புறமான வீடு மதுரை சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. முருகன் நாட்டுவைத்தியர் எனவும், வாராவாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமை மட்டும் இங்கு வந்து பொதுமக்களுக்கு வைத்தியம் செய்வது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் ஏற்கனவே இங்கு வந்து, உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த வீட்டில் இருந்த சில பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இங்கு போதைப் பொருள் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை. தற்போது அந்த வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லாத நிலையில், அருப்புக்கோட்டை ஏஎஸ்பி மதிவாணன் தலைமையில் போலீசார் அந்த வீட்டை சிறிது நேரம் ஆய்வு செய்த பின் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி