மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி விருதுநகர் இரயில் நிலையமும் ரூபாய் 25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார்.