ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம்

1115பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள்கோயிலில் பிரம்மோர்சவ விழா தொடங்கியது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோர்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் 4 வாரத்தின் மூன்றாம் வார சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்தி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள் தானிய பொருள்கள் போன்றவற்றை ஸ்ரீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக வழங்குவார்கள். இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி