விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமையில் தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதி படி வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவது போல் ரூபாய் 6750 ஐ ஓய்வூதியமாக சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பின் படி 2.57 காரணியால் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைத்திட வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது போல் தமிழக அரசு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க மறுத்து வருகிறது என்பதை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.