சிவகாசி: தட்டி கேட்ட வாலிபருக்கு அடி...

77பார்த்தது
சிவகாசி அருகே வாலிபர் கொடூர மீது தாக்குதல். போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த மீனம்பட்டி அருகேயுள்ள பர்மா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பாரதிநகரை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி பழங்களை வாங்க வந்துள்ளார். அப்போது இருவக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த செல்வம், ராஜேந்திரன் கடைக்கு வந்து அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரனின் தம்பி பாலையா (37) என்பவர் இதனை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் அங்கிருந்த கம்பை எடுத்து பாலையாவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலையாவை அருகில் இருந்தவர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி