சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது...

71பார்த்தது
சிவகாசி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. 10 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அடுத்த சித்தமநாயக்கன்பட்டியில் அருகே இயங்கி வரும் பட்டாசு ஆலையின் அருகே வைத்து இளைஞர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக M. புதுப்பட்டி போலீஸாருக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் அதே பகுதியை சேர்ந்த குமரகுரு மகன் அன்பு (22) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி