சிவகாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்பால் வார விழாவில் மருத்துவர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம் சிவகாசி கிளை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார் தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத்துவர்கள் ஜெயராஜ், மல்லிகா, மகப்பேறு மருத்துவர் கல்பனா ஆகியோர் தாய்ப்பாலில் அவசியம் குறித்து பேசினார்கள் இதில் மருத்துவர்கள் ரத்தினம், சோலை குமார், சித்ரா மற்றும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.