சிவகாசி: சாலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்....

69பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம். போலீஸ் விசாரணை.
சிவகாசி அருகே எம். புதுப்பட்டி சாலையில் தனியார் மதுபார் அருகில் பலத்த காயத்துடன் சுமார் 50 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த
எம். புதுப்பட்டி போலீசார் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நெடுங்குளம் விஏஓ மாரீஸ்வரிக்கு கொடுத்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி