சிவகாசி: சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்...

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம், குமிழங்குளம் ஊராட்சியில்
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் குமிழங்குளம் ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் மூத்த குடிமகன் சுந்தரம்மாள் தலைமையில் நடைபெற்றது. தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். இத்திட்டம் குறித்தும் சமூக தணிக்கையின் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர்.
பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டார். திட்டப் பயனாளிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் ஊராட்சி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் சங்கிலி தாஸ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி