சிவகாசி: ரூ. 75 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல்...

83பார்த்தது
சிவகாசி அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 75 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்பேத்கர் சிலை அருகில் கிழக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் உரிய அனுமதி யின்றி ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் கொண்டு வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த கக்கன் காலனியை சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வமணி (33) என்பவரை கைது செய்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி