500ஆ. 2000ஆ. எது வேணும்? -
சிவகாசியில் மாணிக்கம்தாகூர் கேள்வி?.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிடும் மாணிக்கம்தாகூர் சிவகாசி ஒன்றியத்தில் பள்ளபட்டி, நாரணாபுரம், அனுப்பன்குளம், ஈஞ்சார், வடபட்டி உட்பட பல்வேறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடக்கப்போகிறது. பிரதமர் யார் என்று நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்தல். கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிப்பது பிரதமர் தான் கேஸ் சிலிண்டரின் விலை இப்போது 1200 ரூபாய். ஆனால், மோடி 2000 ரூபாய் ஆக்க நினைத்துக் கொண்டிருக்கிறார். ரூ. 2000 நோட்டு, ரூ. 500 நோட்டு அடித்தது போல் 2000 ரூபாய் தான் கேஸ் சிலிண்டர் விலை என பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால், கேஸ் சிலிண்டர் விலையை 2000 ரூபாய் ஆக்க வேண்டுமா அல்லது 500 ரூபாயாக ஆக்க வேண்டுமா என்று நடக்கக் கூடியது தான் இந்த தேர்தல். ஆனால் நமது முதல்வர் மு. க. ஸ்டாலின் சிலிண்டர் விலையை 500 ரூபாய் ஆக்குவேன் என சொல்கிறார். பிரச்சாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் விவேகன்ராஜ், கோபிக்கண்ணன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி உசிலை தங்கராம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.