சிவகாசியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி பேருந்து நிலையம் முன் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு மக்கள் விரோத பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, ஏழை நடுத்தர மக்கள் மீது கடும் தாக்குதல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா, மாவட்ட துணைச் செயலாளர் சமுத்திரம், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 68 ஆண்கள், 35 பெண்கள் என 103 பேரை போலீசார் கைது செய்தனர்.