சிவகாசி: வீட்டில் பட்டாசு தயார் செய்தவர் கைது...

68பார்த்தது
சிவகாசி அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியிலிருந்து M. துரைச்சாமிபுரம் வழியாக வேண்டுராயபுரம் செல்லும் சாலையில் உள்ள முனியசாமி கோவில் அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்து இருப்பதாக மாரனேரி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் மாரனேரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் சம்பவ இடத்தில் காவல் துறையினர் சோதனை செய்தனர். மேலும் சோதனையில் முழுமையாக தயார் செய்த லட்சுமி வெடி 2 பண்டல்கள், மற்றும் தரைச்சக்கரம் 2 பண்டல்கள் இருப்பு இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த செல்வம் மீது மாரனேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி