சிவகாசி அருகே மூதாட்டி மர்ம சாவு. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி ராஜேஷ்வரி (85). இவரது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்டநேரமாக திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது உடல் அசைவு இன்றி மூதாட்டி ராஜேஷ்வரி இறந்து கிடந்தார். இது குறித்து திருத்தங்கல் விஏஓ குருபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.