சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாமியார், மருமகள் கைது...

73பார்த்தது
சிவகாசியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல். மாமியார், மருமகள் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மாமியார், மருமகளை கைது செய்துள்ளனர். சிவகாசி உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் டி. எஸ். பி பாஸ்கர் ஆலோசனையின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தினமும் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் சிவகாசி அறிஞர் அண்ணா காலனி சேர்ந்த பொன்னுகாளை மனைவி சண்முகக்கனி ( 67) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார், மூதாட்டி சண்முகக்கனியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சண்முகக்கனி மற்றும் அவரது வீட்டில் இருந்த தனது மருமகள் ராஜலட்சுமி (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிவகாசி பகுதியில் 10 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி