சிவகாசி: சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

55பார்த்தது
சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல். சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த எம். புதுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் அருண்குமார் (20) என்ற வாலிபரை கைது செய்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி