சிவகாசி: இலவச மருத்துவ முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

60பார்த்தது
சிவகாசி: இலவச மருத்துவ முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் தனியார் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் இன்று டிச. 23 நடைபெற்றது. 

மாநகர நல அலுவலர் சரோஜா தலைமையில் மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் சங்கீதா, திமுக மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், 1வது வார்டு திமுக கவுன்சிலரும் பகுதி கழக செயலாளருமான அ. செல்வம் முன்னிலை வகித்தனர். 

மருத்துவ முகாமில் பொது, சித்த ஆயுர்வேத, பல் ஆகிய மருத்துவங்கள் மற்றும் இசிஜி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், கர்ப்பவாய் புற்றுநோய் மற்றும் ஆய்வகப் பரிசோதனை அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக பார்க்கப்பட்டது. மருத்துவ முகாமில் திருத்தங்கல் மண்டல பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

 மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ, மாநகர சுகாதார அலுவலர்கள், மண்டல தலைவர்கள் பகுதி கழக செயலாளர்கள் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், மருத்துவர் அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள், வட்டார மருத்துவ அல்லாத மேற்பார்வையாளர், இடைநிலை சுகாதார, ஆய்வக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி