சிவகாசியில் விபத்தில் காயம் அடைந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மேற்கு பகுதி அதிமுக மகளீரணி துணைச்செயலாளர் ஆவுடையம்மாளின் மகன் நல்லதம்பி (8) என்ற சிறுவன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கை மற்றும் கால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் குடும்பத்தினருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி,
மேலும் சிறுவன் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி சிறுவனின் குடும்பத்தை திருத்தங்கலில் உள்ள தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து அந்த சிறுவனின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்பு சிறுவரின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.