சிவகாசி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தேன்காலனியை சேர்ந்தவர் மாடசாமி (80). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து சைக்களில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் முதியவர் மாடசாமி மீது மோதியது. இதில் மாடசாமி காயம் ஏற்படாத நிலையில் தலை வலிப்பதாக கூறி சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், முதியவர் மாடசாமி இறந்துவிட்டார் என்று கூறி உள்ளார். டூவீலரை ஒட்டி வந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் தப்பி சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான நபரை தேடி வருகின்றனர்.