சிவகாசி: லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது...

85பார்த்தது
சிவகாசி அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 56 வயது முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியை அடுத்த காக்கி வாடன்பட்டியில் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக முதியவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாரனேரி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில்
காக்கிவாடன் பட்டி மேலத் தெரு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய முதியவர் சீத்தாராமன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 1500/- கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி