சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் கருநெல்லநாத மீனாட்சி அம்பிகை ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அடுத்த திருத்தங்கலிலுள்ள இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான கருநெல்லிநாத மீனாட்சி அம்பிகை ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா நேற்று ஜீன் 8 ஆம் தேதி அதிவிமர்ச்சியாக கொண்டப்பட்டன. பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான இளநீர், பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளி கவசம் அணிந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பிரதோஷ விழாவில் திருத்தங்கல் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.