சிவகாசி: 98 பட்டாசு ஆலைகளுக்கு சுற்றறிக்கை....

77பார்த்தது
சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையம் 98 பட்டாசு ஆலைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் கடந்த 29. 01. 2024 தேதி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன் மற்றும் சூப்பர்வைசர்கள் பயிற்சி பெற சம்பந்தப்பட்ட ஆலை நிறுவனங்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 5000 ரூபாய் செலுத்தி 75 பட்டாசு ஆலைகளின் போர்மேன்கள் சூப்பர்வைசர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். அதேபோல பத்தாயிரம் ரூபாயை அபராதமாக செலுத்தி இதுவரை 24 பட்டாசு தொழிற்சாலைகளின் போர்மேன், சூப்பர்வைசர்கள் பயிற்சியை முடித்துள்ளனர்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் 98 பட்டாசு ஆலைகளின் போர்மேன், சூப்பர்வைசர்கள் பயிற்சியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பட்டாசு ஆலைகள் பயற்சி முடிக்க தவறினால் வரும் செப்டம்பர் மாதம் நடவடிக்கை எடுக்க விமாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கபடும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி