சாத்தூரை அடுத்த கீழ தாயில்பட்டியில்
கணேசன் என்பவருக்கு சொந்தமான இந்தூஸ்தான் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைமத்திய வெடி பொருள் கட்டுபாட்டு துறையால் அனுமதி பெற்றது. மேலும் தொழிலாளிகள் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது தரையில் உராய்வு ஏற்பட்டு தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டன. இந்த வெடி விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் பெற்று வந்த
தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்.