சிவகாசி: ஆனிபிரம்மோற்சவ விழா. சிம்ம வாகனத்தில் சுவாமி விதி உலா

5பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் 'ஆனி பிரம்மோற்சவம்' திருவிழாவின் 2 ஆம் திருவிழா சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா.
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மிகப் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் 'ஆனி பிரம்மோற்சவம்' திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா ஜூலை 4ம் தேதி (வெள்ளி கிழமை) கருட கொடியேற்றத்துடன் திருவிழா நடைப்பெற்று வருகிறது. 2 ஆம் திருவிழாவான நேற்று இரவு ஜூலை-5 சுவாமி சிம்ம வாகனத்தில் மேளதாளம் மற்றும் பெண்கள் கோலாட்டத்தின் வீதி உலா நடைப்பெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் ஜுலை 12ம் தேதி (சனி கிழமை) காலை, ஆனி பிரம்மோற்சவத் தேரோட்டம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி