விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது. சிவகாசி கருமன்கோவில் பகுதியில் சிவகாசி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெற்றிமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்போது அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (60), செல்வராஜ் (57), பாலமுருகன் (56) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ. 7,790-ஐ பறிமுதல் செய்தனர்.