வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீஸார் விசாரணை

3492பார்த்தது
வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீஸார் விசாரணை
சிவகாசி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு - போலீஸார் விசாரணை விருதுநகர் மாவட்டம். சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்வரன் 22. இவரின் சகோதரர் பெவின்ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யாவின் தங்கையை திருமணம் செய்துள்ளார். சூர்யாவிற்கும் பெனின்ராஜிக்கும் வாக்குவாதம். கைகலப்பு ஏற்பட்டது. அதனை சுரேஷ்வரன் விலக்கி விட்டார். இந்நிலையில் சுரேஷ்வரன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சூர்யா, முத்துக்குமார், காளிராஜ், பூமிநாதன், ராஜேஷ், ஜெகதீசன், தினேஷ் ஆகியோர் சராமாரியாக அரிவாளால், கை, தலையில் வெட்டியதில் சுரேஷ்வரனின் பெருவிரல் துண்டானது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி