சிவகாசி அருகே தந்தையின்றி கல்வி தொடர முடியாமல் இருந்த 3 குழந்தைகளின் கல்விச் செலவினை முழுவதுமாக ஏற்று 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுக்கிரவார்பட்டி கிராமம் மேலத்தெருவில் வசிக்கும் ராஜலட்சுமியின் குழந்தைகளான காவியா (12) கவிரஞ்சன் (12), சஷ்டிகா (9) ஆகிய மூவரும் தந்தையின்றி கல்வி தொடர முடியாத நிலையில் இருந்து வந்துள்ளனர்.
இது குறித்து செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி அவர்களை திருத்தங்களில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்தார். பின்பு குழந்தைகள் 3 பேரின் கல்வி செலவினை முழுவதுமாக ஏற்று ராஜேந்திரபாலாஜி 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக குடும்பத்தினரிடம் வழங்கினார். நிதி உதவி பெற்றுக் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் ராஜேந்திரபாலாஜிக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொண்டனர்.