சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் விபத்து குறித்து மாரனேரி போலீசார் ஆலை உரிமையாளர் கடற்கரை போர்மேன் காளியப்பன், ஒப்பந்தாரர் ஆனந்த் ஆகிய 3 பேர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியது, அளவுக்கு அதிகமான ரசாயன பொருட்களை பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று போர்மேன் காளியப்பன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆலை உரிமையாளர் கடற்கரை கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஒப்பந்தாரர் ஆனந்தை போலீசார் தேடி வருகின்றனர்.