விருதுநகர் கிராமநிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பாண்டியராஜன். இவர் அலுவலகத்தில் இருந்தபோது பென்டகன் கம்பெனி அருகே நடந்துசென்ற 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது. விபத்தில் அந்த பெண் கீழே விழுந்து காயமடைந்திருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிராமநிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மேற்குகாவல் நிலையத்திற்கு அளித்த தகவலை அடிப்படையாகக் கொண்டு மேற்குகாவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.