சாத்துார் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் 58. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை ஜூன் 7 நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து ராஜேந்திரன் சாத்துார் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.