சாத்தூர்: சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு

202பார்த்தது
விருதுநகர் மாவட்டம், நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் (எண் 06012) வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் ஜூலை 13 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

தாம்பரம்-நாகா்கோவில் இடையேயான சிறப்பு ரயில் (எண் 06011) ஜூலை 7 முதல் ஜூலை 14 வரை இயக்கப்படும். அதேபோல தெற்கு மேற்கு ரயில்வே சார்பில் செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படும் எஸ்எம்விடி பெங்களூரு-நரங்கி இடையேயான சிறப்பு ரயில் (எண் 06559) வரும் ஜூலை 8 மற்றும் ஜூலை 15-ஆம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, மறுமார்க்கத்தில் நரங்கி-எஸ்எம்விடி பெங்களூரு இடையே சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06560) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 19-ஆம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி