விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே தாயை தாக்கிய மகன் கைது.
சாத்துார் அடுத்த உள்ள நத்தத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி சமுத்தரகனி இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் நல்லதம்பி (22), இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது தகராறில் ஈடுப்பட்டு வந்த நிலையில் பெற்றோர்கள் நல்லதம்பியை கண்டித்து உள்ளனர். இதில் கோபமடைந்த நல்லதம்பி தனது தாயை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் காயமடைந்த சமுத்திரக்கனி சாத்தூர் அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து தாயார் சமுத்திரக்கனி இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நல்லதம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.