விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர்பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள், பள்ளி மாணவ,
மாணவிகள்கள் கடும் அவதி.
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்கள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும்
பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.