சாத்துார்: சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி..

50பார்த்தது
சாத்துார் அருகே சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே நடந்த சாலை விபத்தில தனியார் நிறுவன ஊழியர் பலி. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே திப்பனூத்து கிராமத்தை சேர்ந்த முனியராஜ் (வயது35). இவர் சிவகாசியில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். முனியராஜ் சிவகாசியில் இருந்து தனது சொந்த ஊரான திப்பனூத்துக்கு மோட்டார் சைக்கிளில் சிவகாசி-சாத்தூர். சாலையில் உள்ள மேட்டமலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்
முனியராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த் சாத்தூர் நகர் போலீசார் உயிரிழந்த முனியராஜ் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சதீஸ் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி